பாஜக மூத்த தலைவர் திடீர் மரணம்... பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா இரங்கல்!

சுசில்குமார் மோடி
சுசில்குமார் மோடி

பிஹார் முன்னாள் துணை முதல்வரும்,  பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சுசில்குமார் மோடி
சுசில்குமார் மோடி

1952-ம் ஆண்டு பிறந்த சுஷில் குமார் மோடி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிஹார் அரசியல் களத்தில் இருந்தவர். கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை மற்றும் 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பிஹார் துணை முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார். இதுதவிர எம்எல்ஏ., எம்எல்சி., மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பியாககவும் பதவி வகித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் சுஷில் குமார் மோடிக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக, 2024 மக்களவை தேர்தலில் இருந்து விலகுவதாக சமூகவலைதளத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஷில் குமார் மோடி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள்  பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர்  நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

சுஷில் குமார் மோடி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர் "கட்சியில் எனது மதிப்புமிக்க சக தொண்டரும், பல தசாப்தங்களாக எனது நண்பராக இருந்தவருமான சுஷில் மோடியின் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிஹாரில் பாஜகவின் எழுச்சி மற்றும் வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்து, மாணவர் அரசியலில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கினார். அவர் கடின உழைப்பாளியாகவும், அன்புக்குரிய எம்எல்ஏவாகவும் இருந்தார். அரசியல் தொடர்பான விஷயங்களை ஆழமாகப் புரிந்துகொண்டவர்.

ஒரு நிர்வாகியாகப் பாராட்டத்தக்க பல பணிகளைச் செய்தார். ஜிஎஸ்டியை நிறைவேற்றுவதில் அவர் ஆற்றிய பங்கு எப்போதும் நினைவுகூரப்படும். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "நமது மூத்த தலைவர் சுஷில் குமார் மோடியின் மறைவுச் செய்தியால் நான் வருந்துகிறேன். இன்று பிஹார் அரசியல் ஒரு சிறந்த தலைவரை இழந்துவிட்டது. ஏ.பி.வி.பி. முதல் பாஜா வரை, சுஷில் அமைப்பு மற்றும் அரசாங்கத்தில் பல முக்கிய பதவிகளை வகித்தார்.

அவரது அரசியல் வாழ்க்கை ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அவரது மறைவால் பிஹார் அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை   நிரப்ப நீண்ட நாட்களாகும். இந்த துயரமான  நேரத்தில், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருடன் ஒட்டுமொத்த பாஜகவும் நிற்கிறது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in