சுரங்கப்பாதை அருகே வெளிநாட்டுப் பெண் கொலை?: டெல்லியில் போலீஸார் தீவிர விசாரணை

அழுகிய உடலை மீட்கும் போலீஸார்.
அழுகிய உடலை மீட்கும் போலீஸார்.சுரங்கப்பாதை அருகே வெளிநாட்டுப் பெண் கொலை?: டெல்லியில் போலீஸார் தீவிர விசாரணை

டெல்லியில் உள்ள சுரங்கப்பாதை அருகே அழுகிய நிலையில் வெளிநாட்டு பெண்ணின் உடல் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கீதா காலனி பகுதியில் உள்ள சுரங்கப்பாதை அருகே அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கிடப்பதாக போலீஸாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்திற்கு போலீஸார் சென்ற போது மிகவும் அழுகிய நிலையில் வெளிநாட்டுப் பெண்ணின் உடல் கிடந்தது. 60 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் அழுகிய உடல் அருகே பாஸ்போர்ட் மற்றும் சில ஆவணங்கள் கிடந்தன.

இதையடுத்து அந்த உடலைக் கைப்பற்றிய போலீஸார் , பிரேத பரிசோதனைக்காக மருத்துவமைனைக்குக் கொணடு சென்றனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டுப் பெண்ணை கொலை செய்து உடலை நீண்ட நாள் வைத்திருந்து அதன் பின் சுரங்கப்பாதையில் மர்மநபர்கள் வீசிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," சுற்றுலா விசாவில் பிப்.6-ம் தேதி இந்தியாவிற்கு வந்த பக்வத் லட்ச்மீ என்ற மொரிஷியஸைச் சேர்ந்தவர் உடல் கண்டெடுக்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது. அவர் எப்படி இறந்தார் என்பது தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in