கீழக்கரை அருகே கடலில் மூழ்கி மீனவர் மாயம்: தேடும் பணி தீவிரம்

கீழக்கரை அருகே கடலில் மூழ்கி மீனவர் மாயம்: தேடும் பணி தீவிரம்

கீழக்கரை அருகே தீவு பகுதியில் நீரில் மூழ்கி மீன்பிடியில் ஈடுபட்ட போது மாயமான மீனவரை சக மீனவர்கள் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மாயாகுளம் ,விவேகானந்தபுரம், முத்துராஜ் நகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் அப்பா தீவு பகுதியில் ஓலைக்கயிறு எனும் பாரம்பரிய மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக நாட்டுப்படகில் தலா 20 மீனவர்கள் தினமும் மீன்பிடிக்க செல்வது வழக்கம். அதிகாலை 4 மணிக்கு தொழிலுக்குச் செல்லும் இவர்கள் 5 மணி நேரம் வலை விரித்து அதில் சிக்கும் மீன்களுடன் கரை திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், பாரதி நகரைச் சேர்ந்த சம்மாட்டி குமார் தலைமையில் இன்று காலை ஒரு நாட்டுப்படகில் 11 மீனவர்கள் தொழிலுக்குச் சென்றனர்.

அப்பாவு தீவு அருகே 500 மீட்டர் தொலையில் ஓலைக்கயிறு விரித்த மீனவர்கள் கடல் நீரில் மூழ்கி மீன்கள் சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது முனியசாமி (50) திடீரென மாயமானார். சகமீனவர்கள் துரிதமாக செயல்பட்டு அவரைத் தேடினர். அவரைக் கண்டு முடியாததால் அவர்கள் கரை திரும்பினர்.

இதன்பின்னர் 4 நாட்டுப்படகுகளில் மீண்டும் மீனவர்கள் முனியசாமியைத் தேடிச் சென்றனர். அப்படியும் அவரைக் கண்டுபிடிக்க இயலாமல் கரை திரும்பினர். இதனால் முனியசாமி குடும்பத்தார் உள்ளிட்ட உறவினர்கள், சக மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். இது தொடர்பாக மெரைன் போலீஸாரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in