ஆழ்கடலில் மீன்பிடித்த தூத்துக்குடி மீனவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்

ஆழ்கடலில் மீன்பிடித்த தூத்துக்குடி மீனவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்

தூத்துக்குடியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் செல்வா(48). இவர் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களுடன் நேற்று காலையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார். தூத்துக்குடியில் இருந்து 45 நாட்டிக்கல் தூரத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு செல்வா கடலுக்குள் தவறி விழுந்தார்.

உடனே அதே படகில் செல்வாவுடன் மீன்பிடிக்கச் சென்று இருந்த நான்கு மீனவர்களும் ஆழ்கடலில் குதித்து செல்வாவைத் தேடினர். ஆனால் செல்வா கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கடலோரக் காவல்படையினருக்குத் தகவல் கொடுத்தனர். தூத்துக்குடி கடலோரக் காவல் படையினர் நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின்பு நேற்று இரவு செல்வா மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். உடனே அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே செல்வா பரிதாபமாக உயிர் இழந்தார். மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஆழ்கடலில் தவறிவிழுந்து உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in