மதுரையில் திடீரென பற்றி எரிந்த ஏடிஎம் இயந்திரம்: தீயணைப்பு வீரர்களால் தப்பியது 55 லட்சம்!

மதுரையில் திடீரென பற்றி எரிந்த ஏடிஎம் இயந்திரம்: தீயணைப்பு வீரர்களால் தப்பியது 55 லட்சம்!
மதுரையில் திடீரென பற்றி எரிந்த ஏடிஎம் இயந்திரம்: தீயணைப்பு வீரர்களால் தப்பியது 55 லட்சம்!

மதுரை ராம்நகர் பைபாஸ் சாலையில் உள்ள ஸ்டேட் பேங் ஏ.டி.எம் மையத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்த 55 லட்சம் தப்பியது.

மதுரை ராம்நகர் பைபாஸ் சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்தில் இன்று காலை திடீரென புகை வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொருட்கள் தீ பிடித்து எரியத் தொடங்கியுள்ளன.

இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுரை டவுண் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள தீ அணைப்பு நிலையத்தில் இருந்து வந்த மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் சுரேஷ்கண்ணன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஏ.டி.எம் மையத்தில் எரிந்து கொண்டிருந்த தீயினை அணைத்தனர்.

ஆனாலும் ஏ.டி.எம் மையத்தில் இருந்த 4 குளிர்சாதன இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இந்தநிலையில் ஏ.டி.எம் இயந்திரத்திற்கு தீ பரவாததால் அதில் இருந்த 55 லட்சம் தீயில் இருந்து தப்பியது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த எஸ்.எஸ் காலணி காவல் நிலைய போலீஸார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in