உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `பல்லாவரம் பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த 10 பேர் திருவண்ணாமலை கோயிலுக்கு வேன் மூலம் சென்று திரும்புகையில் அவர்கள் வந்த வாகனம் இன்று அதிகாலை 3 மணி அளவில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் ஜானகிபுரம் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சந்திரசேகர் (70), சசிகுமார் (30), தாமோதரன் (28), ஏழுமலை (65), கோகுல் (33), சேகர் (55) ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

இச்செய்தியை அறிந்தவுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசனை சம்பவ இடத்திற்கு சென்று உரிய உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். மேலும் இவ்விதத்தில் காயம் பட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 4 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்' என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in