அதிர்ச்சி... தூக்கில் தொங்கிய பெண் வக்கீல்; வெளியான உருக்கமான கடிதம்!

ஹீனா பானோட்
ஹீனா பானோட்

அமிர்தசரஸில் பெண் வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது தற்கொலைக்கு மாமியாரும், மாமனாரும் தான் காரணம் என்று அவர் கடிதம் எழுதி வைத்துள்ளதால் போலீஸாரிடம் சிக்கியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸைச் சேர்ந்தவர் ஹீனா பானோட்(28). வழக்கறிஞரனான இவருக்கு கடந்த 2020-ல் திருமணமான நிலையில், ஒரு மகள் உள்ளார். கணவர், குழந்தைகளுடன் ஜபால் சாலையில் உள்ள கிரான்ட் சிட்டி பகுதியில் ஹீனா வசித்து வந்தார்.

தற்கொலை
தற்கொலை

இந்நிலையில், ஹீனாவுக்கும், மாமியாருக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வீட்டில் தூக்குப்போட்டு ஹீனா இன்று தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று ஹீனாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது ஹீனா தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதம் போலீஸாரிடம் சிக்கியது. அதில், தனது தற்கொலைக்கு மாமியாரும், மாமனாரும் தான் காரணம் என்று எழுதப்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதையறிந்த ஹீனாவின் மாமியார் குடும்பம் தலைமறைவாகியுள்ளது. தற்கொலை செய்த ஹீனாவின் சகோதரர் வழக்கறிஞராக பணிபுரிகிறார். ஹீனாவின் தந்தை நீதிபதியிடம் உதவியாளராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில் ஹீனாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமிர்தசரஸ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in