பெண் தலைமைக்காவலர் தீக்குளித்து தற்கொலை: காதல் கணவர் எஸ்கேப்

தற்கொலை செய்த தலைமைக்காவலர் மணிமேகலை.
தற்கொலை செய்த தலைமைக்காவலர் மணிமேகலை.பெண் தலைமைக்காவலர் தீக்குளித்து தற்கொலை: காதல் கணவர் எஸ்கேப்

குடும்பத் தகராறில் தீக்குளித்த பெண் தலைமைக்காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தலைமறைவான அவரது கணவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணிமேகலை(37). இவர் 2006-ம் ஆண்டு தமிழக காவல் துறையில் பணிக்கு சேர்ந்தார். விழுப்புரம் காவல் கட்டுப்பாட்டு அறையில் தலைமைக்காவலராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நடராஜன் என்பவரை மணிமேகலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மிதுன்சாய்(7), நிகேஷ்(6) என இரு மகன்கள் உள்ளனர். கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு ஜனவரி வரை சென்னையில் வேலை பார்த்து வந்த மணிமேகலை. இதன் பின்னர் விழுப்புரத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் குழந்தைகள் இருவரும் நடராஜனுடன் விழுப்புரத்தில் வசித்து வருகின்றனர். கடந்த 10-ம் தேதி குழந்தைகளைப் பார்க்க மணிமேகலை, விழுப்புரம் சென்றுள்ளார். அப்போது அவரைக் குழந்தைகளை பார்க்க விடாமல் கணவர் நடராஜன் தடுத்தாக கூறப்படுகிறது,

இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனஉளைச்சல் அடைந்த மணிமேகலை, மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் படுகாயமடைந்த மணிமேகலையை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மார்ச் 10-ம் தேதி கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மணிமேகலை உயிரிழந்தார்.. இச்சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கணவர் நடராஜனை தேடிவருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in