தோல்வி பயம்: நீட் தேர்வு எழுந்த இருந்த நிலையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

நீட் தேர்வு
நீட் தேர்வுதோல்வி பயம்: நீட் தேர்வு எழுந்த இருந்த நிலையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

நீட் தேர்வு நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தோல்வி பயம் காரணமாக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ். ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். இவரது மனைவி பரிமளம். இவர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிசியோ தெரபிஸ்டாக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாட்டால் கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

பரிமளம் மகன் ஹேமச்சந்திரன் (18) மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்தார். ஹேமச்சந்திரன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் இன்று காலை வீட்டில் உள்ள அறையில் ஹேமச்சந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் கதறி அழுதார்.

அவரது கதறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த போலீஸார், மாணவனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவன் ஹேமச்சந்திரன் கடந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதிய நிலையில் குறைந்த அளவிலான மதிப்பெண் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டுமென மாணவர் முயற்சித்து வந்த நிலையில் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சம் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று நீட் தேர்வு நடக்கவுள்ள நிலையில் தேர்வுக்கு பயந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in