
மனைவி, மூன்று மகள்கள், மகனை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ளது காஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. கூலித் தொழிலாளி. இவரது மனைவி வள்ளி (37), மகள்கள் த்ரிஷா (15), மோனிஷா (14), சிவசக்தி (6), மகன் தனுஷ் (4). இந்த நிலையில் பழனி இன்று காலை பழனி தனது மனைவி, 3 மகள்கள், ஒரு மகனை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயத்துடன் கிடந்த 9 வயதான மற்றொரு மகள் பூமிகா ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தொழிலாளி பழனி தனது குடும்பத்தினரை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.