கள்ளச்சாரயம் - சித்தரிப்புக்கானது
கள்ளச்சாரயம் - சித்தரிப்புக்கானது

கள்ளச்சாராயத்தால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து மூவர் பலியான நிலையில் சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் சற்றுமுன்பு உயிர் இழந்தார். இதனால் கள்ளச் சாராயத்திற்குப் பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், எக்கியார்குப்பம் பகுதியில் நேற்று இரவு ஏராளமானோர் கள்ளச்சாராயம் அருந்தி உள்ளனர். அதில் 16 பேருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இதனால் சிகி்ச்சைக்காக புதுவை, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 6 பேர் மயக்கமடைந்த நிலையிலேயே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலன் இன்றி சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூவர் உயிர் இழந்து இருந்தனர். மேலும் 13 பேருக்கு மரக்காணம், புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இவர்களுக்கு கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த அமரன் என்பவரைப் போலீஸார் கைது செய்ததுடன், மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு கலால் காவல்துறை ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா ஆகிய இருவரையும் பணி இடைநீக்கம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த ராஜமூர்த்தி(55) என்பவர் சிகிச்சைப் பலன் இன்றி சற்றுமுன்னர் உயிர் இழந்தார். இதன்மூலம் கள்ளச் சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

இதனிடையே கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in