`கர்ப்பமாக இருக்கிறேன்; திருமணம் செய்துகொள் என்றாள்'- காதலியைக் கொன்று புதைத்த காதலன் அதிர்ச்சி வாக்குமூலம்!

கைதான காதலன் அகிலன்
கைதான காதலன் அகிலன்`கர்ப்பமாக இருக்கிறேன்; திருமணம் செய்துகொள் என்றாள்'- காதலியைக் கொன்று புதைத்த காதலன் அதிர்ச்சி வாக்குமூலம்!

கர்ப்பமானதால் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய காதலியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து வாய்க்காலில் புதைத்துவிட்டு தப்பியோடிய காதலன் மற்றும் அவனுக்கு உதவி நண்பனையும் போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் விழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட நண்பன்
கைது செய்யப்பட்ட நண்பன்

விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் அருகேயுள்ள சாலவனூர் கிராமத்தில் கடந்த 6-ம் தேதி மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் கிராம மக்கள் ஏரிக்கரை வாய்க்கால் பகுதியில் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது வாய்க்காலை ஆழப்படுத்த பள்ளம் தோண்டியபோது மண்ணிலிருந்து கை பகுதி தெரிய வரவே அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், கஞ்சனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸார் சம்பவ இடத்தில் பள்ளம் தோண்டியபோது பெண் சடலம் புதைக்கக்பட்டிருந்தது. அந்த சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது இளம்பெண் மாயமானதாக விழுப்புரத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் ஏதும் பெறாமல் இருந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தனது அக்காவைப் போன்று உள்ளது என்றும் அவர் அணிந்திருக்ககூடிய நகை மற்றும் உடை எல்லாம் தனது சகோதரி அணிந்திருந்தது என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கஞ்சனூர் போலீஸார் சிறுமியை அழைத்து சென்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தைக் காட்டியுள்ளனர். அதை கண்ட அந்த பெண், அது தனது சகோதரி தான் என உறுதிபடுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து போலீஸார் விசாரணையைத் தொடர்ந்தனர்.

அப்போது அவர், சித்தேரிபட்டியைச் சார்ந்த டிரம்ஸ் இசைக்கும் அகிலனை தனது அக்கா இரண்டு வருடமாக காதலித்து வந்ததாகவும், காதலனால் தனது அக்கா மூன்று மாதம் கர்ப்பமாகியதால் அவரைத் திருமணம் செய்து கொள்ள வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.

அவர் அளித்தத் தகவலின் பேரில் காதல் அகிலன், சென்னையில் தலைமறைவாகி இருந்தது தெரியவரவே சென்னை சென்ற தனிப்படை போலீஸார் அவரை நேற்று முன்தினம் கைது செய்து, விழுப்புரம் அழைத்து வந்தனர்.

அவரிடம் போலீஸார் விசாரணை செய்ததில் காதலி கர்ப்பமாக இருந்ததால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தி வந்ததாகவும், சம்பவத்தன்று கப்பூர் வழியாக சாலவனூர் செல்லும் போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்படவே ஆத்திரத்தில் கன்னத்தில் அறைந்து, கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் இரு நண்பர்கள் உதவியுடன் சண்டை ஏற்பட்ட இடத்திலுள்ள வாய்க்காலில் புதைத்து விட்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் பேரில் கொலை வழக்கில் காதலன் மீது வழக்குப்பதிவும் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதால் போக்சோ வழக்கும் பதிவு செய்துள்ளனர்.மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அகிலனின் நண்பர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in