பேத்திக்கு பாலியல் தொந்தரவு: மருமகள் புகாரால் முன்னாள் அமைச்சர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

பேத்திக்கு பாலியல் தொந்தரவு: மருமகள் புகாரால் முன்னாள் அமைச்சர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

தனது பேத்தியை பாலியல் தொந்தரவு செய்ததாக போக்சோ வழக்கு தொடரப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா தண்ணீர் தொட்டியில் ஏறி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பகுகுணா(59). காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், உத்தராகண்டில் 2004-05-ம் ஆண்டில் என்.டி.திவாரி அரசில் இணை அமைச்சராக இருந்தவர். மேலும், சாலைவழி தொழிற்சங்கத் தலைவரான இவர், ஹல்த்வானி டிப்போ பணிமனையில் பணிபுரிந்தவர். கடந்த அக்டோபர் 31-ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் தனது மகளை பாலியல் தொந்தரவு செய்ததாக ராஜேந்திர பகுகுணாவின் மருமகள் காவல்துறையில் புகார் செய்தார். இதையடுத்து பகுகுணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் காவல்துறையின் அவசர தொலைபேசி எண் வாயிலாக தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பகுகுணா பலமுறை பேசியுள்ளார். இதையடுத்து அவர் வீட்டிற்கு போலீஸார் சென்ற போது, தண்ணீர் தொட்டியில் பகுகுணா ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். ஒலிபெருக்கி மூலம் அவரை கீழே வருமாறு போலீஸார் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், திடீரென துப்பாக்கியால் பகுகுணா தனது மார்பில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் உத்தராகண்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in