பெண்ணைக் காரில் கடத்தி கூட்டுப்பாலியல் பலாத்காரம்: 5 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

கைது
கைது

பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் பாலவந்தம் பகுதியில் உள்ள தன் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, இரவில் வீடுதிரும்ப பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அந்த வழியாகக் காரில்வந்த முத்துசெல்வம் என்ற அவரது உறவினர் அவரை விட்டுவிடுவதாகச் சொல்லி அழைத்துச் சென்றார். கோபாலபுரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது கார் மற்றும் பைக்கில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து, முத்து செல்வத்தை தாக்கி அந்த காரில் இருந்த பெண்ணைக் கடத்தியது.

அப்போதே அந்தப் பெண்ணைக் கூட்டுப்பாலியல் வன்மத்திற்கு உள்ளாக்கி சாலையில் இறக்கிவிட்டனர். இந்த 5 பேர் கும்பலை நீண்ட தேடலுக்குப் பின் கண்டுபிடித்தது காவல்துறை. அவர்கள் முன்னாள் ராணுவ வீரர் கோவிலாங்குளத்தைச் சேர்ந்த சீனிவாசன், ராம்குமார், ஜெயக்குமார், பிரபாகரன், விஜய் எனத் தெரியவந்தது. இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த ஐந்து பேர் மீதும் குண்டர் சட்டத்தை பாய்ச்ச விருதுநகர் மாவட்ட எஸ்.பி மனோகர், ஆட்சியர் மேகநாத ரெட்டிக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 5 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in