உங்களுக்கு திருமணமாகி குழந்தை இருக்குதே?- நண்பர்களிடம் புலம்பிய 34 வயது வாலிபர் தற்கொலை

 தற்கொலை
தற்கொலைஉங்களுக்கு திருமணமாகி குழந்தை இருக்குதே?- நண்பர்களிடம் புலம்பிய 34 வயது வாலிபர் தற்கொலை

34 வயது ஆன நிலையிலும் தனக்கு திருமணம் ஆகாத விரக்தியில் வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், எப்போது வென்றான் அருகில் உள்ளது நமச்சிவாயபுரம். இங்குள்ள கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் கஜேந்திரன்(34). இவர் விளாத்திகுளத்தில் பள்ளி ஒன்றில் வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். கஜேந்திரனுக்கு அவரது பெற்றோர் பல இடங்களிலும் வரன் தேடினர். ஆனாலும் அவருக்கு கல்யாணம் கைகூடவில்லை.

அவருடன் படித்த நண்பர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து குழந்தைகளும் உள்ளன. ஆனால் தனக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லையே என புலம்பியபடியே இருந்தார் கஜேந்திரன். அந்த வேதனையை தன் நண்பர்கள் சிலரிடமும் புலம்பியுள்ளார். இந்தநிலையில் தன் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் அருந்தி மயங்கிக் கிடந்தார் கஜேந்திரன். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in