மாதிரி பள்ளிகளில் 10-ம் வகுப்பில் சேர நுழைவுத்தேர்வு: தமிழக பள்ளி கல்வித்துறை திடீர் அறிவிப்பு

நுழைவுத்தேர்வு
நுழைவுத்தேர்வு மாதிரி பள்ளிகளில் 10-ம் வகுப்பில் சேர நுழைவுத்தேர்வு: தமிழக பள்ளி கல்வித்துறை திடீர் அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள மாதிரி பள்ளிகளில் 10-ம் வகுப்பில் சேர்ந்திட மாணவர்களுக்கு வரும் 4-ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 15 மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அந்த மாதிரி பள்ளிகளில் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன், உண்டு உறைவிட வசதியுடன் கூடிய மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன. மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில் முதற்கட்டமாக 15 மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட உள்ளது. இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் 4-ம் தேதி அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் சேர்ந்திட அடிப்படை தேர்வு நடத்தப்பட வேண்டும் என மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுதன் அறிவித்துள்ளார். இந்த தேர்வு வரும் சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் என்றும் ஓஎம்ஆர் தாள்களை கொண்டு தேர்வு நடத்தப்பட வேண்டும், தேர்வுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 240 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். அதில் 120 மாணவர்களும் 120 மாணவிகளும் இத்தேர்வினை எழுத உள்ளனர். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்கள் மாதிரி பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in