வீடு புகுந்து பொறியாளர் அடித்துக் கொலை: டெல்லியில் கொள்ளையர்கள் அட்டகாசம்

ஓய்வு பெற்ற பொறியாளர் கொலை
ஓய்வு பெற்ற பொறியாளர் கொலைவீடு புகுந்து பொறியாளர் அடித்துக் கொலை: டெல்லியில் கொள்ளையர்கள் அட்டகாசம்

டெல்லி சைனிக் பண்ணை பகுதியில் ஓய்வு பெற்ற பொறியாளர் கொள்ளையர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் சைனிக் பண்ணை பகுதியில் உள்ள சுதந்திரப் போராட்ட காலனியில் வசித்து வந்தவர் சதீஷ்குமார் பரத்வாஜ்(70). இவர் ஓய்வு பெற்ற எம்டிசி பொறியாளர் ஆவார். இன்று காலை 9.30 மணியளவில் போலீஸாருக்கு போன் வந்துள்ளது. அப்போது சதீஷ்குமார் பரத்வாஜ் இறந்து கிடப்பதாக போனில் கூறப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து வந்தனர்.

அங்கு சதீஷ்குமார் பரத்வாஜ் வீடு முழுவதும் பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டிற்குள் சதீஷ்குமார் பரத்வாஜ் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஓய்வு பெற்ற பொறியாளரான சதீஷ்குமாருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளது தெரிய வந்தது. ஒருமகன் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், ஒரு மகளும், ஒரு மகனும் வெளியூரில் வசிப்பதாகவும் தெரிய வந்தது.

இதனால் அவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் நடந்த கொள்ளை முயற்சியை தடுத்ததால் அவர் கொள்ளையர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்தது. அவரது வீட்டில் என்னென்ன பொருட்கள் கொள்ளை போனது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் ஆடம்பரமான சைனிக் பண்ணை பகுதியில் நடைபெற்ற இந்த கொலை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in