மின் இணைப்பு உள்ள அனைவருக்கும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திடீர் உத்தரவு

மின் இணைப்பு உள்ள அனைவருக்கும்  மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திடீர் உத்தரவு

மின் இணைப்பு உள்ளவர்கள் ஆர்சிடி கருவி (டிரிப்பர்) பொருத்துவது கட்டாயம் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக மக்கள் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மின் நுகர்வோர்களுக்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மழைக்காலங்களில் மின் கசிவு காரணமாக அடிக்கடி மின் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த விபத்துகளால் மனித உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்க அனைத்து வீடுகளிலும் ஆர்டிசி (Residual Current Device) கருவியைப் பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி மின்கசிவால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்க மின் இணைப்புகளுடன் இந்த கருவியைப் பொருத்துவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீடு, கடை, தொழில், பண்ணை வீடு, கல்வி நிறுவனங்கள் என அனைத்து வகை மின் நுகர்வோரும் இந்த கருவியைப் பொருத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in