வேலை முடிந்து வீடு திரும்பிய எலக்ட்ரீசியன் கழுத்தை அறுத்துக்கொலை: மர்மநபர்கள் வெறிச்செயல்

வேலை முடிந்து வீடு திரும்பிய எலக்ட்ரீசியன் கழுத்தை அறுத்துக்கொலை: மர்மநபர்கள் வெறிச்செயல்

திருச்செங்கோடு  அப்பர்பாளையம் அருகே பணி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த எலக்ட்ரீசியனை வழிமறித்த  மர்ம நபர்கள் சிலர்  வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்செங்கோடு அருகே அப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர் தேவா என்ற தேவராஜ் (34). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வரும் இவர் நேற்று அப்பர்பாளையத்தில் பணிக்கு சென்று விட்டு  இரவு இருசக்கர வாகனத்தில்  வீடு திரும்பிக்  கொண்டிருந்தார். 

அப்பர்பாளையத்திலிருந்து கைலாசபாளையம் செல்லும் ரோட்டில் ஜெகதாம்பாள் நகர் அருகில் சென்று கொண்டிருந்தபோது  மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்தனர். அவர்கள் வைத்திருந்த அரிவாளால் தேவாவை சரமாரியாக வெட்டியவர்கள்  அவரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர்.  சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருச்செங்கோடு ஊரக போலீஸார், தேவராஜன் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து  வழக்குப் பதிவு செய்து கொலையாளிகள் யார்,  கொலைக்கான காரணம் என்ன என்பது  குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in