நடுக்கடலில் பொருட்கள் கொள்ளை: புதுக்கோட்டை மீனவர்களை பிடித்துச் சென்றது இலங்கை கடற்படை!

நடுக்கடலில் பொருட்கள் கொள்ளை: புதுக்கோட்டை மீனவர்களை பிடித்துச் சென்றது இலங்கை கடற்படை!

வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். 

ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்தில் இருந்து நேற்று 87 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களில்  பி.தமிழ்செல்வன்(37) என்பவருக்குச் சொந்தமான படகில் அவருடன் சி.விஜி(28), ஏ.தினேஷ்(26), கே.ரஞ்சித்(27), எஸ்.பக்கிரிசாமி(45), எஸ்.கமல்(25), எஸ்.புனுது(41) மற்றும் எம்.கார்த்திக்(27) ஆகிய 8 பேர் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுமார் 32 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துள்ளனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களது மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.  அவர்களை காங்கேசன் துறை கடற்படை தளத்திற்கு கொண்டு சென்ற இலங்கை  கடற்படையினர் அங்கு வைத்து  தமிழக மீனவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணைக்குப் பின்னர் மீனவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த  மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in