
பாஜக அரசின் 8 ஆண்டு கால ஆட்சியில், தெருவில் இறங்கி போராடுவதன் மூலம் இப்போதுதான் தனது இருப்பை முழுதாய் நிரூபித்து வருகிறது பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ்.
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீதான அமலாக்கத் துறையின் புதிய நெருக்கடிகளால், காங்கிரசார் நீண்ட உறக்கத்திலிருந்து மீண்டிருக்கிறார்கள். அமலாக்கத்துறை மட்டுமன்றி வருமான வரித்துறை, சிபிஐ, தேசிய பாதுகாப்பு முகமையான என்ஐஏ உள்ளிட்ட நாட்டின் அதிகாரம் மிக்க விசாரணை அமைப்புகளுடன் ’கூட்டணி அமைத்து’, 2024 மக்களவை தேர்தலுக்கு பாஜக தயாராவதாய் பீதியுடன் புகார் வாசிக்கிறது காங்கிரஸ். நாட்டு நிலவரத்தை சற்று ஊன்றி கவனிப்பவர்களால் காங்கிரசின் புகாரை அத்தனை எளிதில் ஒதுக்கிவிட முடியாது.
தெளிய வைத்துத் தாக்கும் பாஜக
வளம், வளர்ச்சி என்றெல்லாம் வாய்ப்பந்தலிட்டு முதல்முறை ஆட்சியை பிடித்த பாஜக, அவையெல்லாம் ஆகிற கதையில்லை என்று பெரும்பான்மையினர் உணர்வுகளுக்கு தூபமிடும் இந்துத்துவா முழக்கத்தை முன்னிறுத்தி இரண்டாவது இன்னிங்ஸை உறுதி செய்தது. இப்போது மூன்றாவது முயற்சியாக புதிரான கணக்குகளுடன் 2024 மக்களவை தேர்தலுக்கு அதிரடியாக தயாராகி வருகிறது.
இதற்கான முதலடியாக எதிர்க்கட்சி முகாம்களில் பலவீன ஆடுகளை வேலி தாண்ட வைத்தது. அசராதவர்களை தெளிய வைத்து அடிக்கும் பணியைப் பின்னர் தொடங்கியது. இதற்காக தனது அபிமானத்துக்குரிய, தேசத்தின் உச்ச விசாரணை அமைப்புகளில் அமலாக்கத்துறையை அதிகம் அவிழ்த்து விட்டிருக்கிறது. இந்த அமலாக்கத்துறையின் பாய்ச்சல் எந்த சூழலில் அரங்கேறுகிறது என்பதை கவனித்தால் அதன் பின்னிருக்கும் அரசியல் நோக்கம் பிடிபடும்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.