அதிகாலையில் மணிப்பூர், மேகாலயாவை அதிர வைத்த நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

நிலநடுக்கம்
நிலநடுக்கம்அதிகாலையில் மணிப்பூர், மேகாலயாவை அதிர வைத்த நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

மணிப்பூர் மற்றும் மேகாலயாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டை வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள நோனி நகரில் இன்று அதிகாலை 2.46 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், வீட்டைவிட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட விவரங்கள் வெளிவரவில்லை.

மேகாலயா மாநிலத்தில் துரா என்ற நகரிலிருந்து 59 கிலோமீட்டர் தொலைவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகியுள்ளது. காலை 6.57 மணிக்கு பூமிக்கு அடியில் 29 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in