குஜராத்தை தொடர்ந்து அச்சுறுத்தும் நிலநடுக்கம்: அசாமையும் உலுக்கியது பூகம்பம்

நிலநடுக்கம்
நிலநடுக்கம்குஜராத்தை தொடர்ந்து அச்சுறுத்தும் நிலநடுக்கம்: அசாமையும் உலுக்கியது பூகம்பம்

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.42 மணியளவில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதேபோல அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

கடந்த சில வாரங்களாகவே குஜராத்தில் தொடர்ந்து நிலநடுக்கம் பதிவாகி வருகின்றன. கடந்த மார்ச் 6ம் தேதி குஜராத்தின் துவாரகாவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல பிப்ரவரி 26ம் தேதி குஜராத்தின் ராஜ்கோட் அருகே 4.3 அளவிலான நிலநடுக்கமும், பிப்ரவரி 24 அன்று, அம்ரெலி பிராந்தியத்தில் 3.4 மற்றும் 3.1 ரிக்டர் அளவிலான இரண்டு லேசான நிலநடுக்கங்களும் ஏற்பட்டன.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது, 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நேற்று அந்தமான் நிக்கோபர் தீவுகளின் திக்லிபூர் பகுதியில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in