அந்தமானை அதிகாலை அதிர வைத்த நிலநடுக்கம்... உத்தராகண்டிலும் அடுத்தடுத்த அதிர்வுகளால் மக்கள் அச்சம்!

அந்தமானை அதிகாலை அதிர வைத்த நிலநடுக்கம்... உத்தராகண்டிலும் அடுத்தடுத்த அதிர்வுகளால் மக்கள் அச்சம்!

அந்தமான் கடல் பகுதியில் இன்று அதிகாலையிலும், உத்தராகண்ட் தலைநகர் பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவிலும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உத்தராகண்ட்
உத்தராகண்ட்

அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே இன்று அதிகாலை 4.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 54 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அதனருகே உள்ள தீவு சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள், உயிரிழப்புகள்  உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

அந்தமான்
அந்தமான்

இதேபோன்று, நேற்று நள்ளிரவில் 12.18 மணியளவில் உத்தராகண்டின் தலைநகர் டேராடூன் நகரில் 2.8 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. நில நடுக்கத்தை உணர்ந்த அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு அலறிக்கொண்டு வெளியில் ஓடி வந்து சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.  இதேபோல உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நேற்று அதிகாலை 5.35 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தன. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.  கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு உத்தராகண்டில் உள்ள பிதோராகர் பகுதியில் இதேபோல நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது.

பிதோராகரில் 5 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இப்படி தொடர்ந்து உத்தராகண்டில்  பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் புவி ஆராய்ச்சியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in