ஒகேனக்கலில் உயர்கிறது நீர்வரத்து

ஒகேனக்கலில் உயர்கிறது நீர்வரத்து

சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி நீரின் அளவு இன்று மீண்டும் வெகுவாக உயர்ந்திருக்கிறது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கிய நாட்களில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வந்தது. இதனால் மேட்டூர் அணை  வழக்கத்திற்கு முன்னதாகவே தனது முழு கொள்ளளவை எட்டியது.  அதனால் அதன் பின்னர் மேட்டூர் அணைக்கு வந்த காவிரி நீர் முழுவதும் அப்படியே கொள்ளிடம் ஆறு வழியாக கடலுக்கு அனுப்பப்பட்டது. வினாடிக்கு   சுமார் 1.50 லட்சம் கன அடி நீர் வீதம் தொடர்ந்து உபரி நீர்  கடலுக்கு அனுப்பப்பட்டது. 

மீண்டும், மீண்டும்  கர்நாடகத்தில் கனமழை பெய்யத் தொடங்கியதால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் அனுப்பப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது. அதன் காரணமாக  மூன்று முறை மேட்டூர் அணையில் நிரம்பி உபரிநீர்  16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு கடலுக்கு அனுப்பப்பட்டது.

காவிரியில் அதிக நாட்கள் நீர்வரத்து உயர்ந்திருந்ததால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. நீர்வீழ்ச்சிகளை மூழ்கடித்து  வெள்ளம் பெருக்கெடுத்தது.  அதனால் பரிசல் இயக்கவும், அருவிகளுக்கு செல்லவும்  தடை விதிக்கப்பட்டிருந்தது.  கடந்த சில தினங்களாக மழை குறைந்து காவிரியில் வரும் நீர் வெகுவாக குறைந்தது. அதையடுத்து ஒகேனக்கல் சுற்றுலாப் பயணிகள்  நடமாட்டம் காணப்பட்டது.

இந்த நிலையில்   திரும்பவும்  காவிரியில் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு உயரத் தொடங்கியிருக்கிறது.  காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக  நேற்று மாலை நிலவரப்படி 9500 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் அது இரவில் படிப்படியாக உயர்ந்து  இன்று காலை நிலவரப்படி 35,000  கன அடியாக உயர்ந்துள்ளது..

மேட்டூருக்கு வரும் நீரின் அளவு 9500 கன அடியிலிருந்து கன அடியில் இருந்து 20,600 கன அடியாக உயர்ந்திருக்கிறது. அதன் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது. அணையில்  இருந்து டெல்டா பாசத்திற்கு 15 ஆயிரம் கன அடி நீர்  திறந்துவிடப்படுகிறது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in