
ஹைதராபாத் புறநகரில் உள்ள ஷம்ஷாபாத்தில் நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாக 40 வயது நபரை சைபராபாத் போலீஸார் கைது செய்தனர்.
ஹைதராபாத் நகரில் நடந்த மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், ஷம்ஷாபாத்தில் நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திங்கள் கிழமை குடிபோதையில், குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியுள்ளார். பின்னர், சிறுமியின் பெற்றோர் இந்த கொடூர செயல் நடந்த ஒரு நாள் கழித்து காவல்துறையில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், சைபராபாத் போலீசார் ஐபிசி பிரிவு 376, போக்சோ சட்டம் மற்றும் எஸ்சி & எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர்.