அதானி ஸ்பான்சர் செய்வதால் இந்த விருது வேண்டாம்: கவிஞர் சுகிர்தராணி அறிவிப்பு

கவிஞர் சுகிர்தராணி
கவிஞர் சுகிர்தராணி அதானி ஸ்பான்சர் செய்வதால் இந்த விருது வேண்டாம்: கவிஞர் சுகிர்தராணி அறிவிப்பு

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் வழங்கும், தேவி விருதை வேண்டாம் என்று கவிஞரும், எழுத்தாளருமான சுகிர்தராணி மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில் சுகிர்தராணி ஒரு பதிவை இன்று பதிவிட்டுள்ளார். அதில்," நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 12 பெண் ஆளுமைகளைச் தேர்ந்தெடுத்து ' தேவி அவார்டு ' வழங்குகிறது. இலக்கியம் மற்றும் தலித் இலக்கியத்தில் தொடர்ந்து இயங்கி வரும் என் சமூகப் பங்களிப்பிற்காக, ' தேவி அவார்டு' எனக்கு வழங்கப்படுகிறது. அதற்காக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு என் நன்றி. விருது வழங்கும் விழா பிப்ரவரி 8-ம் தேதி சென்னை ஐடிசி கிரான்ட் சோழா ஓட்டலில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

சுகிர்தராணிக்கு விருது அறிவிப்பு
சுகிர்தராணிக்கு விருது அறிவிப்புஅதானி ஸ்பான்சர் செய்வதால் இந்த விருது வேண்டாம்: கவிஞர் சுகிர்தராணி அறிவிப்பு

இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கு முதன்மை ஸ்பான்சர் அதானி என்பது நேற்றுதான் எனக்குத் தெரிய வந்தது. நான் பேசும் அரசியலுக்கும். கொண்ட கொள்கைக்கும் சிந்தனைக்கும் அதானி நிதி உதவி அளிக்கும் ஓர் அமைப்பிலிருந்தோ, நிகழ்ச்சியிலிருந்தோ விருது பெறுவது எனக்கு சிறிதும் உவப்பில்லை. எனவே, இந்த 'தேவி விருது' பெறுவதை மறுக்கிறேன்.

சுகிர்தராணியின் பதிவு
சுகிர்தராணியின் பதிவு

இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கும் என் விருது மறுப்பை முறைப்படி இன்று மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்து விட்டேன். நான் எப்போதும் என் அரசியல் தெளிவு மற்றும் தெரிவிலிருந்து விலகிச் செல்ல மாட்டேன் என்பதை நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in