மறுஉத்தரவு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம்: தூத்துக்குடி மீனவர்களுக்கு அலர்ட்!

மறுஉத்தரவு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம்: தூத்துக்குடி மீனவர்களுக்கு அலர்ட்!

நாளை முதல் மறு உத்தரவு வரும்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட மீன்வர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறையின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தென்மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை கொடுத்திருந்தது. மட்டுமல்லாது, நாளை தமிழக கடலோரப் பகுதிகளிலும், மன்னார் வளைகுடாவிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், ஒரு சில பகுதிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும் எனவும் எச்சரித்து இருந்தது.

இதேபோல் நாளை மறுநாள் 8-ம் தேதி, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்குப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடை, இடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் சில பகுதிகளிலும் காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நாளை முதல் மறு உத்தரவு வரும்வரை தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் ஏற்கெனவே கடலுக்கு சென்று இருப்போரும் உடனே கரை திரும்புமாறு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in