பாலுக்கு அழுத 14 மாத குழந்தை: மனைவி மீதுள்ள கோபத்தில் விஷம் வைத்துக் கொன்ற தந்தை

விஷம்
விஷம்மனைவியுடன் தகராறு; 14 மாத குழந்தைக்கு விஷம் கொடுத்த கொலை செய்த தந்தை!

குடும்பத் தகராறில் மனைவி தாய் வீட்டிற்குச் சென்று விட்டதால், பசியால் பாலுக்கு அழுத 14 மாதப் பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு, மற்றொரு மகளுக்கும் விஷம் கொடுத்தப் பின்னர் தந்தையும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த கிழக்குபதனவாடியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் டிராக்டர் வைத்து விவசாய பணி செய்கிறார். இவரது மனைவி சத்யா, இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன.

கணவன் மனைவி இருவருக்கும் கடன் பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம். இதேபோல நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கோவத்தில் மூத்த மகளை மட்டும் அழைத்துக் கொண்டு தாய் வீடான ஜல்லியூர் கிராமத்திற்கு சத்யா சென்றுவிட்டார்.

இந்த நிலையில், வீட்டில் இருந்த 14 மாத பெண் குழந்தை பசியால் அழுதுள்ளது. குழந்தையை சமாதானம் செய்ய முடியாத சிவக்குமார் விரக்தி அடைந்து பாலில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார். பின்னர் சாப்பாட்டில் விஷம் கலந்து தானும் சாப்பிட்டுவிட்டு 2வது குழந்தைக்கும் கொடுத்துள்ளார். அந்த குழந்தை சாப்பிட முடியாமல் வாந்தி எடுக்கவே பயந்து போய் அண்ணனுக்கு போன் செய்து குடும்ப தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டேன். நானும் விஷம் குடித்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அவர் வந்து மூவரையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் 14 மாத குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக திருப்பத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 14 மாத குழந்தையை தந்தையே விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in