இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள்.
சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள்.இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி மகாலிங்கம் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தென்மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் வருகின்றனர். இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் 7-ம் தேதி பவுர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் (மார்ச் 4) முதல் 7-ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம். பத்து வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலையேறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடியப் பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்கக் கூடாது.

இரவில் மலைக்கோயிலில் தங்க அனுமதி இல்லை என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மலைப்பகுதிகளில் மழை பெய்தாலோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகம் இருந்தாலோ மலையேற தடை விதிக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in