இந்தியாவில் வேகமாக குறைந்து வரும் கரோனா பாதிப்பு, உயிரிழப்பு!

இந்தியாவில் வேகமாக குறைந்து வரும் கரோனா பாதிப்பு, உயிரிழப்பு!

இந்தியாவில் கரோனா பாதிப்பு விறுவிறுவென்று குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 34,113 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், 346 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரத்து 113 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 44 ஆயிரத்து 877ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் கரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 65 ஆயிரத்து 534 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 91 ஆயிரத்து 930 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 16 லட்சத்து 77 ஆயிரத்து 641 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 4 லட்சத்து 78 ஆயிரத்து 882 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், கரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 346 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 9 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 172 கோடியே 95 லட்சத்து 87 ஆயிரத்து 490 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in