அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8-வது நாளில் உயிரிழப்பு: இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்

அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8-வது நாளில் உயிரிழப்பு: இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்

குன்னூரில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் 8 நாட்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள பெட்டட்டி பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவரது மனைவி அனுசுயா. கர்ப்பமாக இருந்த அனுசுயாவுக்கு கடந்த 10-ம் தேதி குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு அவருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை செய்து 24 மணி நேரம் ஆகியும் அனுசியா மயக்கமாக இருந்துள்ளார்.

இதனால் அவரது குடும்பத்தினர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுசியாவை அனுமதித்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அனுசியா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்தேகம் மரணம் என்று கூறி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் சென்னையில் கால்பந்து வீராங்கனை பிரியா காலில் ஏற்பட்ட வலி காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுபோது உயிரிழந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in