பலத்த காயமடைந்தவர்களில் இதுவரை 8 பேர் பலி: காஞ்சிபுரம் காஸ் குடோன் தீ விபத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு!

பலத்த காயமடைந்தவர்களில் இதுவரை 8 பேர் பலி: காஞ்சிபுரம் காஸ் குடோன் தீ விபத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு!

காஞ்சிபுரம் பகுதியில் காஸ் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா தேவரியம்பாக்கம் பகுதியில் காஸ் சிலிண்டர் குடோன் செயல்பட்டு வந்தது. இங்கிருந்து ஒரகடம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வணிக ரீதியான சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 28-ம் தேதி திடீரென அந்த குடோன் தீப்பற்றி எரிந்தது. அப்போது குடோனிலிருந்த சிலிண்டர்கள் அடுத்தடுத்து பலத்த சத்தத்துடன் வெடித்து சிறியதில் ஊழியர்கள், குடோன் அருகே இருந்த பொதுமக்கள், சிறார்கள் உட்பட 12 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது ஒரகடம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கடலூரைச் சேர்ந்த ஆமோத்குமார்(26), சந்தியா(21), சந்தியாவின் தந்தை ஜீவானந்தம்(46), கும்பகோணத்தைச் சேர்ந்த குணாளன்(22), தேவரியம்பாக்கத்தைச் சேர்ந்த கோகுல், சண்முகப்பிரியன்(17), கிஷோர் ஆகிய 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண்(30) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in