சாலையில் அறுந்துவிழுந்த மின்வயர்; குழந்தையை பள்ளியில் விட்டு வந்தவர் உயிரிழப்பு: சென்னையில் சோகம்

உறவினர்கள் சாலை மறியல்
உறவினர்கள் சாலை மறியல்மின்வயர் அறுந்து விழுந்து உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல்

சென்னை பெரும்பாக்கத்தில் மின் வயர் அறுந்து விழுந்து 40 வயது மதிக்கத்தக்க நபர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிந்தார். சடலத்துடன் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

சென்னையை அடித்த பெரும்பாக்கம் நேதாஜிநகர் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயி. தனது குழந்தைகளை அரசங்கலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.  அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் மின்வயர் அறுந்து முகமது இஸ்மாயில் மீது விழுந்துள்ளது. 

இதில் அவரது உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சாலையில் சென்ற நாய் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

மின்சாரம் தாக்கி நாய் உயிரிழப்பு
மின்சாரம் தாக்கி நாய் உயிரிழப்புமின்வயர் அறுந்து விழுந்து உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல்

அதே சாலையில் இருசக்கர வாகனத்தின் பின்னே வந்த ஒரு டாட்டா ஏசி வாகனத்திலும் மின் உயர் விழுந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக டாட்டா ஏசி ஓட்டுநர் உயிர்தப்பினார். 

தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பள்ளிக்கரணை காவல் மாவட்ட துணை ஆணையர் ஜோஸ் தங்கையா தலைமையிள் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஏராளமான போலீஸார் சம்பவ இடத்தில் குவிந்தனர். இதையடுத்து, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் உறவினர்கள் உடலை வாங்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in