சென்னையில் லிப்ட் கேட்ட சிறுவனுக்கு பாலியல் கொடுமை; பாஜக-வை சேர்ந்தவர் கைது!

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

சென்னையில் டூவீலரில் லிப்ட் கேட்டு சென்ற சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், பாஜக-வை சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து சென்ற சிறுவன் ஒருவன் அபாய குரல் எழுப்பியபடியே சென்றுள்ளான். ஆனால் இருசக்கர வாகனத்தை ஓட்டியவர் அந்த சிறுவனின் குரலை கண்டுகொள்ளாமல் தனது வாகனத்தை இயக்கியுள்ளார்.

இதனை கண்ட அப்பகுதியில் சென்றவர்கள் சிலர் இரு சக்கர வாகனத்தினை ஓட்டியவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன் பின் வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த சிறுவனிடம் விசாரித்த போது அவன் சொன்ன தகவலால் அதிர்ந்து போயினர்.

லிப்ட் கேட்டு டூவீலரில் வந்த தன்னிடம் டூவீலரை ஓட்டிய நபர் பாலியல் ரீதியிலான சேட்டை செய்தததாகவும், இதனால் தன்னை இறக்கிவிடும்படி கெஞ்சியும் வண்டியை நிறுத்தாமல் வந்ததாகவும் அந்த சிறுவன் அதிர்ச்சி விலகாமல் தனக்கு நடந்த கொடுமையை கூறியுள்ளான்.

இதையடுத்து ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் பைக் ஓட்டி வந்தவரை நையப் புடைத்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த நபர் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பாலச்சந்திரன் என்பதும் அவர் பாஜக உறுப்பினர் அட்டை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போக்சோ வழக்கில் பாலச்சந்திரனை போலீஸார் கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in