தம்பி மனைவியிடம் வரதட்சணைக் கேட்டு டார்ச்சர்: சிக்கிய பெண் போலீஸ், மாமனார், மாமியார்

தம்பி மனைவியிடம் வரதட்சணைக் கேட்டு டார்ச்சர்: சிக்கிய பெண் போலீஸ், மாமனார், மாமியார்

திண்டுக்கல் மாவட்டத்தில் வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்த பெண் காவலர் உள்பட அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், மேலகோவில்பட்டியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் அழகுராஜ்(35). இவர், திண்டுக்கல் ஊர்க்காவல்படையில் அழகுராஜ் வேலைசெய்து வருகின்றார். இரு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், லீலாவதி(32) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களும், பத்து பவுன் நகைகளும் சீதனமாக வழங்கப்பட்டன. இந்நிலையில் மேலும் மூன்று லட்ச ரூபாயும், ஐந்து பவுன் நகையும் கேட்டு லீலாவதியை அழகுராஜ் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து லீலாவதி நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், லீலாவதியின் கணவர் அழகுராஜ், மாமனார் முத்துசாமி, மாமியார் ஜோதி, நாத்தனார் நாகலெட்சுமி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். இதில் நாகலெட்சுமி விளாம்பட்டி காவல்நிலையத்தில் காவலராக உள்ளார். காவலர் மீதே வரதட்சணை வழக்குப் பதியப்பட்ட சம்பவம் திண்டுக்கல் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in