போலி செய்திகளைப் பரப்பினால் கிரிமினல் வழக்கு: யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

போலி செய்திகளைப் பரப்பினால் கிரிமினல் வழக்கு: யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

போலி செய்திகளைப் பரப்பும் யூடியூப் சேனல்கள் முடக்கப்படுவதோடு அதன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளைப் பரப்பும் யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டு தன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதியப்படும் என மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் தவறான தகவல்கள் மற்றும் செய்திகளால் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படுவதோடு, மக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பம் ஏற்படுகிறது.

சமூக வலைதளங்களில் பலர் தனியாக யூடியூப் சேனல்கள் தொடங்கி தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் அரசுக்கு எதிராகவும், நாட்டைச் சீர்குலைக்கும் வகையிலும் சர்ச்சை கருத்துக்களைப் பதிவிட்டு வருவதால் தேவையில்லான பிரச்சினைகள் உண்டாகிறது. மேலும் போலியான செய்திகளையும் வெளியிட்டு வருவதால் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பம் ஏற்படுகிறது.

இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் நூற்றுக்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டன. இதில் பெரும்பாலான யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்டவையாகும். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்தது.

இந்த நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளைப் பரப்பும் யூடியூப் சேனல்களை முடக்கி தன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in