`அதிகரிக்கிறது கொரோனா; படுக்கைகள், மருந்து, ஆக்ஸிஜன் தயார்’ - அலர்ட் செய்யும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்`அதிகரிக்கிறது கொரோனா, படுக்கைகள், மருந்து, ஆக்ஸிஜன் தயார்’ - அலர்ட் செய்யும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

’தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் அறிவுறுத்தல்படி தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்படும்’ என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’மத்திய அரசின் அறிவுறுத்தல்படி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு இல்லாத நிலை இருந்தது. தற்போது உருமாற்றம் கொண்ட கொரோனா தொற்று பரவி வருகிறது.

இந்தியாவில் 200க்கும் கீழ இருந்த கொரோனா பாதிப்பு தற்போது ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை சோதித்ததில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே H3N2 என்ற வைரஸ் பாதிப்பு இருந்தது. முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப 1586 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.  கடந்த 10 நாட்களில் 23833 காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் மூலம் 10 லட்சத்து 41 ஆயிரம் பேர் பங்கேற்றதில் 7,500 பேர் காய்ச்சல் ஏற்பட்டவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. H3N2 வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் முடிவுக்கு வந்துள்ளது, தற்போது 15 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். 

அரசு மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதிகளை உறுதிப்படுத்திகொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அரசின் அறிவுறுத்தலுக்கு முன்னதாகவே இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு பகுதியில் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் அந்த பகுதிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டால் அந்த பகுதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். தமிழ்நாடு பாதுகாப்பாக உள்ளது. பொதுமக்கள் பதற்றப்பட தேவையில்லை.

மேலும், 2000 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை சேமித்து வைத்துக்கொள்ளும் அளவிற்கு தமிழ்நாட்டில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. படுக்கைகள், மருந்து, ஆக்ஸிஜன் போன்றவை சரியாக உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் நோய் எதிர்ப்புசக்தி தன்மை குறித்து தமிழ்நாடு முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தி ஆய்வு நடத்தப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நலமுடன் உள்ளார். மத்திய அரசின் ஆலோசனைகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என்பதால் நடவடிக்கைகளில் தீவிரமாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஊரடங்கு போட வேண்டிய நிலை இல்லை. தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in