டெல்லியில் வேகமாக பரவும் கொரோனா: ஒரே நாளில் 300 பேர் பாதிப்பு

டெல்லியில் கொரோனா அதிகரிப்பு
டெல்லியில் கொரோனா அதிகரிப்புடெல்லியில் வேகமாக பரவும் கொரோனா: ஒரே நாளில் 300 பேர் பாதிப்பு

டெல்லியில் ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த திங்கள்கிழமையன்று 24 மணிநேரத்திலான கொரோனா பாதிப்பு, 1805 ஆக பதிவாகி இருந்தது. மார்ச் 28-ம் தேதி 1573 ஆக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 5 மாதங்களுக்குப் பின் கொரோனாவின் வேகம் அதிகமாகி வருவதால் மத்திய, மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு முதல் முறையாக நேற்று 300 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் கொரோனாவால் டெல்லியில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக நகர சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக காய்ச்சல் முகாம்களை அரசு முடுக்கி விட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வேகமாக பரவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in