இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்தது; ஒரேநாளில் 347 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்தது; ஒரேநாளில் 347 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,409 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா குறைந்துவரும் நிலையில், ஒரேநாளில் 347 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் நாட்டில் கரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், உயிரிழந்தோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புதிதாக 27,409 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,26,92,943 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் புதிதாக 347 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,09,358 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்றில் இருந்து ஒரேநாளில் 82,817 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,17,60,458 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 97.82% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.99% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,23,127 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 1,73,42,62,440 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் 44,68,365 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in