இந்தியாவில் திடீரென அதிகரித்தது கரோனா உயிரிழப்பு!

இந்தியாவில் திடீரென அதிகரித்தது கரோனா உயிரிழப்பு!

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,615 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 514 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,615 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,27,23,558 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 309 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கரோனாவுக்கு ஒரே நாளில் 514 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,09,872 ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 82,988 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,18,43,446 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 97.94% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.87% ஆக குறைந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,70,240 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 1,73,86,81,675 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 41,54,476 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in