இந்தியாவில் மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கரோனா: ஒரே நாளில் 19 ஆயிரம் பேர் பாதிப்பு

இந்தியாவில் மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கரோனா: ஒரே நாளில் 19 ஆயிரம் பேர் பாதிப்பு

இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,893 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரேனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று கரோனா எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்தது. கடந்த 4 நாட்களாக சரிவைச் சந்தித்து வந்த கரோனா தினசரி பாதிப்பு நேற்று மீண்டும் 17 ஆயிரத்தைக் கடந்தது.
இதன்படி நேற்று 17 ஆயிரத்து 135 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் 6 மாநிலங்களில் ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் கரோனா பாதிப்பு இன்று மீண்டும் 19 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி உள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19 ஆயிரத்து 893 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,40,87,037 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,26,530 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 20,419 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,34,24,029 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனா தொற்றுக்கு தற்போது 1,36,478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38,20,676 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் கரோனா பாதிப்பைக் கண்டறிய ஒரே நாளில் 4,03,006 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 87,67,60,536 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in