தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல்: இன்று வெளியிடப்படுகிறது

தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல்: இன்று வெளியிடப்படுகிறது

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளைச் சீர் செய்யும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு பணி ஆக.1-ம் தேதி முதல் நடந்து வருகிறது. தமிழகத்தில் ஆறு கோடியே 21 லட்சத்து 22 ஆயிரத்து 922 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3. 15 கோடி பேர் வாக்காளர்கள் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்த திட்டத்தை நிறைவு செய்யவும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கம் பணிகளை மேற்கொள்ளவும் இம்மாதம் சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கடிதம் எழுதியுள்ளார். துணை, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த 25-ம் தேதி தொடங்கி கடந்த 7-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் வெளியிடப்படுகிறது. இந்த நாளின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் முறையான வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் பங்கேற்பு என்கிற விழிப்புணர்வு பேரணியை நடத்த முடிவு செய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in