விரைவு பேருந்தில் பயணித்தால் காத்திருக்கிறது சலுகை: பயணிகளுக்கு தமிழக அரசு இனிப்பான செய்தி

விரைவு பேருந்தில் பயணித்தால் காத்திருக்கிறது சலுகை: பயணிகளுக்கு தமிழக அரசு இனிப்பான செய்தி

விரைவு பேருந்தில் பொதுமக்கள் பயணித்தால் அவர்களுக்கு அசத்தல் சலுகையை அறிவித்துள்ளது தமிழக விரைவு போக்குவரத்து கழகம்.

இது குறித்து தமிழக விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், "விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் அதிநவீன மிதவைப்பேருந்து, குளிர்சாதனப் பேருந்து, குளிர்சாதன படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்து, கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்துகள் என 1,082 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கும் சேர்ந்து, மொத்தம் 251 வழித்தடங்களில் இப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

300 கி.மீட்டருக்கும் அதிக தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பயணச்சீட்டை முன்பதிவு செய்வதற்கான வசதி கடந்த 2006-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலம், ஒரு மாதத்துக்கு முன்பே பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்நிலையில், பயணிகள் நீண்ட தொலைவுப் பேருந்துகளில் பயணிப்பதை ஊக்குவிக்கவும், தனியார் பேருந்துகள், ரயில் போன்றவற்றில் பயணிப்போரை ஈர்க்கவும், விழா நாட்கள் நீங்கலாக, இதர நாட்களில் இணையவழி மூலமாக இருவழிப் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்தார். தற்போது இந்த அறிவிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரே நேரத்தில் ஊருக்குச் சென்று வருவதற்கான பயணச்சீட்டை இணையவழியில் முன்பதிவு செய்தால், திரும்பி வருவதற்கான பயணச்சீட்டு கட்டணத்தில் 10 சதவீத சலுகை வழங்கப்படுகிறது. விழா நாட்களுக்கு இந்த சலுகை பொருந்தாது. இதை பயன்படுத்த விரும்புவோர் https://www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc கைபேசி செயலியை அணுகலாம்" என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in