பேராசிரியர்கள் நியமனத்தில் கல்வித்தகுதியில் சமரசம் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

பேராசிரியர்கள் நியமனத்தில் கல்வித்தகுதியில் சமரசம் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் உள்ள பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி எஸ் .எம். சுப்பிரமணியம், ’’தகுதியற்ற கல்லூரி ஆசிரியர்களை நியமித்தால் இறுதியில் பாதிக்கப்படுபவர்கள் படிக்கும் மாணவர்கள் தான். ஆசிரியர் பணியிடங்களை நியமிப்பதற்கான கல்வித் தகுதி விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது. கல்லூரி நிறுவனங்களில் நிர்வாகிகள் ஆசிரியர் கல்வித் தகுதி விஷயத்தில் எந்த ஒரு அனுதாபமோ சமரசமோ காட்டக்கூடாது. அது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் தகுதிகளைச் சரிபார்க்க வேண்டும்’’ என்று் அவர் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கல்லூரி கல்வி இயக்குனரை விசாரணை நடத்துவதற்கு தகுதியான அதிகாரி என்பதால், கல்லூரிகள் செய்யப்பட்ட நியமனங்கள் முறையானதா சரியானதா என்பதை கல்லூரி கல்வி இயக்குனர் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும், ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 254 பேராசிரியர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களுடைய கல்வித் தகுதி மற்றும் அசல் ஆவணங்களை சரி பார்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த மாதம் 14-ம் தேதி இதுகுறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் கல்லூரி கல்வி இயக்குனருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in