`எங்கக்கிட்ட வம்பு வச்சிக்காதீங்க'- ரயிலில் பட்டாக்கத்தியுடன் பயணிகளை அச்சுறுத்திய கல்லூரி மாணவர்கள்

`எங்கக்கிட்ட வம்பு வச்சிக்காதீங்க'- ரயிலில் பட்டாக்கத்தியுடன் பயணிகளை அச்சுறுத்திய கல்லூரி மாணவர்கள்
`எங்கக்கிட்ட வம்பு வச்சிக்காதீங்க'- ரயிலில் பட்டாக்கத்தியுடன் பயணிகளை அச்சுறுத்திய கல்லூரி மாணவர்கள்

புறநகர் ரயிலில் கத்தியை உரசியபடி பயணிகளை அச்சுறுத்தும் வகையில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வந்த மின்சார ரயிலில் நேற்று கல்லூரி மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர். ரயில் பட்டாபிராம் இந்து கல்லூரியில் நின்று புறப்பட்ட உடன் அதில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் சிலர் படியில் தொங்கியபடி நடைமேடையில் பட்டாக்கத்தியை உரசிக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணம் செய்தனர். அப்போது அவர்கள், `நாங்கள் பச்சைபாஸ் காலேஜ், எங்கக்கிட்ட வம்பு வச்சிக்காதீங்க' என்று கோஷமிட்டவாறு பயணம் செய்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனையடுத்து ஆவடி ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சரண்ராஜ், அபினேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் சில கல்லூரி மாணவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in