நடுரோட்டில் கல்லூரி மாணவர் குத்திக்கொலை: காதல் விவகாரத்தால் வாலிபர் வெறிச்செயல்

வாலிபர் குத்திக்கொலை
வாலிபர் குத்திக்கொலைநடுரோட்டில் கல்லூரி மாணவர் குத்திக்கொலை: காதல் விவகாரத்தால் வாலிபர் வெறிச்செயல்

நடுரோட்டில் வாலிபர் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்டதற்கு காதல் தகராறே காரணம் எனத் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக இரண்டு வாலிபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மும்பை செம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முக்தார் ஷேக். கல்லூரி மாணவரான இவர் செம்பூர் லால் டோங்கர் பகுதியில் நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை இரண்டு வாலிபர்கள் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருவர் திடீரென கத்தியால் முக்தார் ஷேக்கின் வயிறு, மார்பு, தலையில் சரமாரியாக குத்தினார். மக்கள் நடமாட்டமிக்க பகுதியில் நடந்த இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கத்திக்குத்துப்பட்ட முக்தார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனால் கத்தியால் குத்திய இருவரும் அங்கிருந்து பைக்கில் தப்பிச்சென்றனர்.

தகவலறிந்து வந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்து முக்தார் ஷேக்கை பார்க்கும் போது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காதல் விவகாரத்தில் முக்தார் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

மும்பையில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் படித்த முக்தார் ஷேக், ஒரு பெண்ணைக் காதலித்துள்ளார். ஏற்கெனவே ஒருவரை காதலித்து அவரைப் பிடிக்காமல், முக்தாரை அந்த இளம்பெண் தற்போது காதலித்து வந்துள்ளார். இதனால் அவரது முன்னாள் காதலன் ஆதித்யா திரிபுவன் (21), அவரது நண்பர் கல்பாம் சயாத்(20) என்பவருடன் சேர்ந்து முக்தார் ஷேக்கை குத்திக்கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

அவர்களது செல்போனை சிக்னலை வைத்து தனிப்படை போலீஸார் தேடிவந்தனர். ஆனால், அவர்கள் குர்லாவிலிருந்து கல்யாண் முதல் தாராவி வரை இருப்பிடங்களை மாற்றிக்கொண்டே இருந்தனர். இந்த நிலையில் ஆதித்யா திரிபுவன், அவரது நண்பம் கல்பாம் சயாத் ஆகியோர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தப்ப முயன்ற போது நேற்று இரவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கொலைக்கான ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டது. காதல் விவகாரத்தால் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in