கல்லூரி பேராசிரியர்கள் இனி ஓவர் கோட் அணிய வேண்டும்: தமிழக உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு

கல்லூரி பேராசிரியர்கள் இனி ஓவர் கோட் அணிய வேண்டும்: தமிழக உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி பேராசிரியர்களும் ஓவர் கோட் அணிய வேண்டும் என்று உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக உயர் கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கு உயர்கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக ஓவர் கோட் அணிய வேண்டும் என உயர் கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது.

பேராசிரியர்களுக்கிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு ஓவர் கோட் அணிய வேண்டும் என்று உயர்கல்வித்துறையில் இருந்து கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in