3 வாரங்களில் 2.61 கோடி அபராதம்: சென்னையில் எகிறும் குடிகாரர்கள் எண்ணிக்கை

வாகனச் சோதனை
வாகனச் சோதனை3 வாரங்களில் 2.61 கோடி அபராதம்: சென்னையில் எகிறும் குடிகாரர்கள் எண்ணிக்கை

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து கடந்த மூன்று வாரங்களில் ரூ.2.61 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’ சென்னையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீஸார் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் வித்திக்கப்பட்டு வருகிறது. ஒருசிலர் மட்டுமே அபராதம் செலுத்தும் நிலையில் பலர் அபராதம் செலுத்துவது இல்லை.

இதனால் ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனைத் தீர்க்கும் பொருட்டு போக்குவரத்து போலீஸார் சிறப்பு முகாம் அமைத்து அபராதத் தொகையை வசூலித்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த மூன்று வாரங்களில் 2,521 வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.2,61,21,500 வசூலிக்கப்பட்டுள்ளது.

குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அபராதம் செலுத்தவில்லை என்றால் அவர்களின் வாகனம் மட்டுமல்ல, அவர்களின் வீட்டில் உள்ள அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்’’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in