தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

வேலூர் விண்ணேற்பு ஆலயத்தில் இரவு நடந்த கூட்டு திருப்பலி
வேலூர் விண்ணேற்பு ஆலயத்தில் இரவு நடந்த கூட்டு திருப்பலிபடம்: வி.எம்.மணிநாதன்

கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இதனை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை ஆகியவை நடைபெற்றது. கிறிஸ்தவர்கள், கிறிஸ்து பிறப்பை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

பாலப்பள்ளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான குடில்
பாலப்பள்ளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான குடில் படம்: எம்.நல்லபெருமாள்

முந்தைய இரு ஆண்டுகளில் கரோனா பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள் ஆகியவை இருந்ததால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் இருந்தன. பொதுமுடக்கத் தளர்வுக்குப் பின்பு வந்த கிறிஸ்துமஸ் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் தற்போது மின்னொலியில் ஜொலித்தன. ஆட்டு கொட்டகையில் இயேசு பிறந்ததை சித்தரிக்கும் வகையில் பெரும்பாலான தேவாலயங்களில் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. குமரி மாவட்டம், பாலப்பள்ளம் பகுதியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிலை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர். வேளாங்கண்ணி தேவாலயம், சென்னை சாந்தோம் உள்பட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடந்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று நள்ளிரவு அனைத்து தேவாலயங்களிலும் கூட்டு திருப்பலி நடந்தது. இதில் குழந்தை இயேசுவின் சொரூபத்தை கையில் ஏந்தி இயேசு பிறப்பு அறிவிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்தும், ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி, பிரார்த்தனை ஆகியவை தொடர்ந்து நடந்து வருகிறது. கிறிஸ்தவர்கள் இந்நாளில் எளிய மக்களுக்கு உதவிகளையும் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in